மும்பை தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனது அலுவலகத்தில் உயர்மட்ட கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில், தேசிய புலனாய்வு நிறுவனம், கறுப்பு பூனைப்படை, உளவுத்துறை, ரா ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும், உள்துறை செயலாளரும் கலந்து கொண்டனர்.
ஒன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், 6.45 மணிக்கு முதல் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த செயல், பயங்கரவாதிகளின் ஒருங்கிணைந்த செயலாக இருக்கும் என கருதுகிறேன். மும்பையில் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு படை உள்ளது. தற்போது அவர்கள் பாதுகாப்பு கருதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, டில்லி மற்றும் ஐதராபாத்தில் இருந்து விமானங்கள் மூலம் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மூன்று இடங்களை தவிர, மும்பையில் வேறு எங்கும் குண்டு வெடிப்பு நடந்ததாக தகவல் இல்லை. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.
No comments:
Post a Comment